பொள்ளாச்சி- ஜூன்- 14
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று வைகாசி மாதம் அமாவாசை என்பதால் அம்மனுக்கு 18 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து கொடிமரம் அருகே தங்கள். வேண்டுதலை நிறைவேற்று விதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தும் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி பில்லி சூனியம் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டி நீதி கல்லில் மிளகாய் அரைத்து பூசி வழிபாடு செய்தனர் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் கோவில் நிர்வாகம் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க மற்றும் பாதுகாப்பு நலன் கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்