பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டம்
கோவை, மே 31:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் காந்திபார்க் ரவுண்டாடான அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மண்டல செயலாளர் முத்துகிருஷ்ணன், சாந்தி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும்போது, ஒன்றிய அரசு 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு வரை காத்திருந்து விட்டு தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு கரப்பான் பூச்சிகளின் வாகனங்கள் என்ற பெயரில் பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது, என்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரப்பான் பூச்சி போன்று முகமூடி அணிந்து இருந்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.