மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.வீரவசந்தராயர் மண்டபம் பிரதிஷ்டை

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு இன்று வீரவசந்தராயர் மண்டப பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் கிழக்கு கோபுர வாசல் அருகே வீர​வசந்​த​ராயர் மண்​டபத்​திலிருந்த கடைகளில் 2018 பிப். 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் வீர​வசந்​த​ராயர் மண்​டபம் முழு​மை​யாக சேதமடைந்​தது. 

இந்நிலையில் அப்போதைய அரசு ரூபாய் 18.10 கோடி​யில் மண்​டபத்தை சீரமைக்க முடிவு செய்​யப்​பட்​ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன

ஆனால், கொரோனா ஊரடங்​கு, ஒப்​பந்​தம் விடு​வ​தில் ஏற்​பட்ட தாமதம் போன்ற காரணங்​களால் பணி​கள் தள்​ளிப்​போனது. 

தொடர்ந்து 2021-ம் ஆண்டு வீர​வசந்​த​ராயர் மண்​டபம் சீரமைப்பு பணிக்​கான புதிய மதிப்​பீடு தயாரிக்​கப்​பட்​டு ரூபாய் 38.30 கோடி​யில் மண்​டபத்தை கட்ட முடிவு செய்​யப்​பட்​டு பணி​கள் நடை​பெற்று வந்​தன.

தொடர்ந்து 2026-ல் மண்​டப சீரமைப்புப் பணி​கள் துரிதப்​படுத்​தப்​பட்டு கடந்த ஜூன் 18-ம் தேதி இந்த மண்​டபத்​துக்​கான 79 தூண்​களை​யும் நிறு​வும் பணி நிறைவு​பெற்​றது. பின்​னர், மேற்​கூரை உள்​ளிட்ட பிற பணி​கள் நடை​பெற்​று 8 ஆண்​டு​களுக்குப் பிறகு மண்​டபப் பணி​கள் தற்​போது முழு​மை​யாக நிறைவடைந்தது

இந்நிலையில் மீனாட்சி அம்மன் திருக்கோயில் குட​முழுக்கு வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடை​பெறவுள்ள நிலை​யில், அதற்கு முன்​பாக வீர​வசந்​த​ராயர் மண்​டபத்தைத் திறக்க கோயில் நிர்​வாகம் முடிவு செய்​த நிலையில் இன்று காலை 9.00 மணி முதல் 9.15 மணிக்குள் வீரவசந்தராயர் மண்டப பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.கல்லாணை மற்றும் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி அவர்கள், அறங்காவலர் குழுத் தலைவர் திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன், மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், திருக்கோயில் இணை ஆணையரும் நிர்வாக அதிகாரியுமான க.செல்லத்துரை, உள்ளிட்ட துறை அதிகாரிகள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், அர்ச்சகர்கள். பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்