“வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நல்லது!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

 “வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நல்லது!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

 

சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்துக் கொண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம்  கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் சம்பத் வருகை தந்தார் பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
சட்டப்பேரவை நிகழ்வுகள் பொதுவாக பேரவை தலைவர் சொன்னதை போல தமிழக முதல்வர் சொன்னதைப் போல சட்டப்பேரவை பொருத்தமட்டில் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்ற கருத்துக்களை பரிமாறு கொண்டாள் நன்றாக இருக்கும் வார்த்தை ஜாலங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்றார். எம்எல்ஏவுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு எம்எல்ஏக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் தேவை சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக நடைபெற்ற அனைத்தும் தேவை நகராட்சி தலைவர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிறது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களால் செய்து கொடுக்க முடியாத எண்ணம் தான் இதற்குக் காரணம் திமுகவினருக்கு
நிதி நெருக்கடி இருந்தாலும் தன்னலம் கருதாது மாற்ற வேண்டிய கடமை எம்எல்ஏவுக்கு உண்டு எனவே பல்வேறு நிதி சுமை  இருந்தாலும் கூட  செய்யலாம் என்று செய்து வருகிறோம் ஆந்திராவிலும் இதுபோன்று வழங்கி உள்ளார்கள் நிதி நெருக்கடி காரணமாக திமுக சொல்வது அவர்களால் முடியவில்லை என்பதால் பேசி வருகிறார்கள்
வறட்சி  நிவாரணம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தான் கொடுக்கப்படும் நிலத்தின் தன்மை எவ்வாறு மாறி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் அதன் பின்பு கொடுக்கப்படும்,
மூன்று கோப்புகள்   உள்ளது என்று அமைச்சர் சொன்னதற்கு சட்டத்தின் அடிப்படையில் கோப்புகளை பார்த்து அதில் என்ன இருக்கிறது என்பதை பார்த்து அதன் பின்பு சட்ட நடவடிக்கை பார்த்து பின்னர் முடிவெடுக்கப்படும் அதை அவர் ஆராய்ந்து பார்த்துள்ளார் அதன் பின்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் உடனிருந்தார்.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்