தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.

தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம்  - தினகரன்!!

தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - தினகரன்!!

தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் - தினகரன்!!

சென்னை: 
‘கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டுக்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

வேட்​பாளரின் பெயரை வைத்து யாரும் வாக்​களிக்​க​வில்​லை - சவுமியா அன்புமணி கருத்து....

வேட்​பாளரின் பெயரை வைத்து யாரும் வாக்​களிக்​க​வில்​லை - சவுமியா அன்புமணி கருத்து....

ஒரு வேட்​பாளரின் பெயரை வைத்து யாரும் வாக்​களிக்​க​வில்​லை;  சின்​னத்தை வைத்​து​தான் வாக்​களித்​துள்​ளனர்!! சவுமியா அன்புமணி கருத்து....

விழுப்புரம்: ​

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை !!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை !!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை !!

பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் விஜய்!!

சென்னை: டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் விஜய்!!டெல்லி பயணத்தை முன்​கூட்​டியே முடித்​துக் கொண்டு முதல்​வர் விஜய் நேற்று சென்னை திரும்​பினார். முன்​ன​தாக திட்​டமிடப்பட்ட சோனி​யா, ராகுல் சந்​திப்பு ரத்து செய்யப்​பட்​டதால் அரசி​யலில் அது பெரும்விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆட்சி அமைக்க பெரும்​பான்மை கிடைக்​காத​தால் காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். இப்​படி​யான அரசி​யல் திருப்​பங்​களுக்​கிடையே முதல்​வர் விஜய் நேற்று முன்​தினம் டெல்லி சென்​றார். இது அவரது முதல் டெல்லி பயணம் என்​ப​தால், தேசிய அளவில் இது உன்​னிப்​பாகக் கவனிக்​கப்​பட்​டது.

சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் 27-ம் தேதி மதி​யம் டெல்லி சென்​றடைந்த விஜய்க்​கு, தமிழக அரசு விருந்​தினர் இல்​லத்​தில் தமிழக காவல்​துறை சார்​பில் முறைப்​படி​யான அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது. அன்​றைய தினம் மாலை 4.30 மணி​யள​வில் நாடாளு​மன்ற வளாகத்​தில் பிரதமர் நரேந்​திர மோடியை விஜய் சந்​தித்​துப் பேசி​னார்.

பிரதமரைத் தொடர்ந்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை விஜய் சந்​திப்​ப​தாக இருந்​தது. ஆனால், கடைசி நேரத்​தில் அந்த சந்​திப்பு நடை​பெற​வில்​லை. அதையடுத்து விஜய் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை சந்​தித்து தமிழகத்​துக்​கான திட்​டங்​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்​நிலை​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களான சோனியா, ராகுல், மல்​லி​கார்​ஜூன கார்கே ஆகியோரை​யும் விஜய் சந்​திப்​பார் என்ற தகவல் வெளி​யானது.

இதனால் சோனியாவின் இல்​லத்​தைச் சுற்​றி​லும் முதல்​வர் விஜய்யை வரவேற்று பிரம்​மாண்ட பதாகைகளும் வைக்​கப்​பட்​டிருந்​தன. ஆனால் திடீரென காங்​கிரஸ் தலை​வர்​களு​ட​னான சந்​திப்பு ரத்​தானது. முன்​ன​தாக கேரளா​வின் புதிய காங்​கிரஸ் முதல்​வ​ராக சதீஷன் பதவி​யேற்​கும் விழா​வில் விஜய் பங்​கேற்​ப​தாக இருந்த திட்​டம் திடீரென ரத்​தான நிலை​யில், டெல்​லி​யில் காங்​கிரஸ் தலை​வர்​களை விஜய் சந்​திக்க இருந்த திட்​ட​மும் ரத்​தானது இது கட்சி நிர்​வாகி​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இப்​படி​யான சூழலில் நேற்று காலை 10 மணி​யள​வில் டெல்லி பயணத்தை முன்​கூட்​டியே முடித்​துக்​கொண்டு தனி விமானத்​தில் விஜய் சென்னை திரும்​பி​னார்.

முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கமாக கருணாநி​தி, ஜெயலலி​தா, ஸ்டா​லின், பழனி​சாமி உள்​ளிட்ட முன்​னாள் முதல்​வர்​கள் டெல்லி சென்று பிரதமரை சந்​தித்​தால் தமிழ்​நாடு அரசு விருந்​தினர் இல்​லத்​தில் செய்​தி​யாளர்​களைச் சந்​திப்​பது வழக்​கம். ஆனால் விஜய் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பை​யும் தவிர்த்​தது பேசுபொருளானது.

இதுகுறித்து சென்னை தலை​மைச் செயலக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிரதமர் மோடி​யுட​னான விஜய்​யின் சந்​திப்பு சுமார் 10 நிமிடங்​கள் நீடித்​தது. இந்த சந்​திப்​பின்போது நெதர்​லாந்​தில் இருந்து வரலாற்​றுச் சிறப்​புமிக்க சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்​கலம் செப்​புப் பட்​ட​யங்​களை மீட்​டுக் கொண்டு வர வழி​வகை செய்​ததற்​காகப் பிரதமருக்கு விஜய் நன்றி தெரி​வித்​தார்.

மேலும் காவிரி ஆற்​றின் குறுக்கே கர்​நாடக அரசு திட்​ட​மிட்​டுள்ள மேகே​தாட்டு அணைத் திட்​டத்​தால் தமிழக விவ​சா​யிகளுக்கு ஏற்​படும் பாதிப்​பு​கள் குறித்​தும் விவரித்​தார். இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் தொடர்ச்​சி​யாக கைது செய்​யப்​படு​வதற்கு நிரந்​தரத் தீர்வு காண வலி​யுறுத்​தி​னார். அரசு விழாக்​களில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடு​வது தொடர்​பாக அண்​மை​யில் எழுந்த சர்ச்சை குறித்து பேசி​னார்.

தமிழகத்​தில் விமானப் போக்​கு​வரத்து கட்​டுப்​பாட்டு மையம் மற்​றும் பாது​காப்​புத் துறை சார்ந்த வான்​வழி உள்​கட்​டமைப்​பு​களை நிறு​வக் கோரி​யும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்​தார். அமித் ஷாவுக்கு அவசர அலு​வல் பணி​கள் இருந்​த​தால் விஜய்யை சந்​திக்​க​வில்​லை. ஆனால் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களை சந்​திக்​காமல் சென்​னைக்கு திரும்​பிய​தில் பல்​வேறு அரசி​யல் காரணங்​கள் முன்​வைக்​கப்​படு​கின்​றன.

காவிரி விவ​காரம் மற்​றும் தமிழகத்​தில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது எழுந்த குதிரை பேர சர்ச்​சைகள், கர்​நாடக காங்​கிரஸில் வெடித்​துள்ள உள்​கட்சி பிரச்சினை போன்​றவற்​றால் இப்​போது காங்​கிரஸ் தலை​வர்​களைச் சந்​தித்​தால் அது தேவையற்ற விவாதங்​களை உரு​வாக்​கும் என்​ப​தால் விஜய் இந்​தச் சந்​திப்​பைத் தவிர்த்​த​தாக ஒருதரப்​பில் தகவல்​கள் கூறப்​படு​கின்​றன. ஆனால் மற்​றொரு தரப்போ காங்​கிரஸ் தலை​வர்​களு​ட​னான சந்​திப்பு நடை​பெறாததற்கு பின்​னணி​யில் சில அரசி​யல் அழுத்​தங்​களும் இருக்​கலாம் என்​கிறார்​கள். இவ்​வாறு தெரி​வித்​தனர்.

காரணம் என்ன? - இந்​தச் சர்ச்சை குறித்து காங்​கிரஸ் எம்​.பி. கிறிஸ்​டோபர் திலக் கூறிய​தாவது: இதனை தமிழக முதல்​வர் ஒரு அரசு​முறைப் பயண​மாக மட்​டுமே வைத்​திருக்க விரும்​பி​யிருக்​கலாம். அதனால்​தான் பிரதமரை மட்​டும் சந்​தித்​து​விட்​டுத் திரும்​பி​யுள்​ளார். ஜூன் 11-ம் தேதி முதல்​வர் மீண்​டும் டெல்லி வரவுள்​ளார். அப்​போது நிச்​சய​மாக சோனியா, ராகுலைச் சந்​திப்​பார்.

தற்​போது ஜார்​கண்ட் மாநிலங்களவை சீட், கர்​நாடகாவில் முதல்​வர் தேர்வு உள்​ளிட்ட விஷ​யங்​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக அந்த மாநில காங்​கிரஸ் தலை​வர்​கள் டெல்லி வந்​துள்​ளனர். கடந்த இரண்டு நாட்​களாக இந்த விவாதங்​கள் சோனியா இல்​லத்​தில் தீவிர​மாக நடந்து வரு​வ​தால், தமிழக முதல்​வருடன் விரி​வாக அமர்ந்து பேசுவதற்​கான நேர​மும் வாய்ப்​பும் காங்​கிரஸ் தலை​வர்​களுக்​குக் குறை​வாக இருந்​தது. இதில் யோசிப்​ப​தற்கோ அல்​லது எதிர்​மறை​யாக நினைப்​ப​தற்கோ எது​வும் இல்​லை. நாங்​கள் தவெக கூட்​ட​ணி​யில் நீடிக்​கிறோம், அமைச்​சர​வை​யிலும் இருக்​கிறோம்.

எனவே, நாங்​கள் சந்​திப்​ப​தில் எந்​தச் சிக்​கலும் இல்​லை. விஜய் முதல்வ​ராக பதவி​யேற்​ற​போது ராகுல்தான் முதல் ஆளாக வந்து பங்கேற்றார். சோனியா காந்தி இல்​லத்​தில் முதல்​வருக்கு விருந்து கொடுக்​கத் திட்​ட​மிடப்​பட்​டிருக்​கலாம்​. ஆனால்​, காங்​கிரஸ்​ தலை​மை சில முக்​கிய உள்​கட்​சி முடிவு​களை எடுக்​க வேண்​டி​யிருந்​த​தால்​, அது அடுத்​த முறைக்​குதள்​ளிவைக்​கப்​பட்​டிருக்​கலாம்​. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்