சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்!!
தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம் என வலியுறுத்தியுள்ளார்.
கோவை
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம் என வலியுறுத்தியுள்ளார். கோவையில் தனியார் மருத்துவமனையின் புதிய மருத்துவ வளாகத்தை திறந்து வைத்த அவர், நோய் வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
'வி தி லீடர்' அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவதாக அறிவித்த பிறகு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முதன்முறையாக கோவைக்கு வருகை தந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், தனது பயணத்தின் முதல் நிகழ்வாக சிங்காநல்லூரில் அமைந்துள்ள என்.ஜி. மருத்துவமனையின் புதிய மருத்துவ வசதிகள் கொண்ட வளாகத்தை திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான கருத்துகளை மட்டும் பகிர்ந்துகொண்டார்.
உணவுப் பொருட்களின் தரக்கட்டுப்பாடு முழுமையாக மக்களின் கையில் இல்லை என்பதால், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றாத சூழலில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, வருமுன் காத்துக்கொள்வதே சிறந்த மருத்துவ அணுகுமுறை என்றும், அதனை வலியுறுத்தும் வகையில் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த புதிய வளாகத்தை திறந்து வைக்க வந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
திமுக கூட்டணியில் தற்போது இல்லை
திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகமாக பேசக்கூடாது, அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கக்கூடிய முதல் முதலமைச்சர் என சாடியுள்ள அமைச்சர் செங்கோட்டையன்,
“ஆலமரம் போல் தழைத்த கும்மி ஆட்டம்” ; வள்ளி முருகன் கலைக் குழுவின் 10-வது ஆண்டு விழா - கோவையில் ஒரே வண்ண உடையில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை ஆடிய வள்ளி - கும்மி நடனம் !!!
"கல்வியில் சிறந்த தமிழ்நாடக" உருவாக்குவதே அரசின் இலக்கு
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீது காவல்துறை தரப்பில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்
தமிழகத்துக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.1,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தகவல்!!
சென்னை:
தமிழகத்துக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.1,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய திட்டங்களின் நிலை, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வருவாய்த் துறையில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இருமாதங்களில் துறை சார்பில் எந்தெந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளை உடனுக்குடன் வழங்குவது பற்றி இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இணையதளம் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் சான்றிதழ்களை 5 நாட்களுக்குள் வழங்க விஏஒ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முடிவு செய்யவுள்ளோம். பத்திரப்பதிவில் இருக்கும் தேக்கங்களை சரிசெய்து, பட்டாக்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைச் சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை மாஞ்சோலையில் கூடுதலாக மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் பெரியளவில் மழை இல்லை. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.பேரிடர் மேலாண்மை துறைக்கு தற்போது தேவைப்படும் ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
முதல்வர் பத்திரிகையாளர் களைச் சந்தித்து பதில் சொல்வதைவிட, மக்களுக்கு சொன்னதை செய்கிறோமா என்ற அடிப்படையில் செயல்பாடுகளைத்தான் முக்கியமாக நினைக்கிறார். இண்டியா கூட்டணியில் தவெக இடம்பெறுவது குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- கோவையில் நடைபெற்ற பாஹா ஆஃப் ரோடு வாகன பந்தய போட்டி
- கோவையில் ரோட்டரி கிளப் மில்லேனியம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
- குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு இனி ஜாக்பாட்!! இன்று முதல் பஸ் எண் 104 பேருந்து சேவை!!!
- PM👩💼 பெண்கள் பொருளாதார சக்தியாக மாறும் புதிய திட்டம்! கோவையில் வரவேற்பு! வரவேற்பு
- அமைச்சரிடம் பெண்கள் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு- tvk காவல்துறைக்குஅமைச்சர் கே விக்னேஷ் அறிவுறுத்தல்
- 🔥 கோவையில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்! அமைச்சர் வி. சம்பத்குமார் நேரில் பங்கேற்பு
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி
- 🚨 திமுகவை அவதூறாக பேசிய கவுன்சிலர் சிக்கலில்! வழக்கு தொடர்வோம் – சரத் விக்னேஷ்
- 🔥 கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு! பழனி கோவில் நில விவகாரத்தை CBI விசாரிக்க கோரிக்கை
- வஹ்தத்தே இஸ்லாமே ஹிந்த் சார்பாக மாநிலம் தழுவிய ஊழியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது,